சந்தந் தரும் வண்ணக்கவி சிந்தைஎங்கும் நிறைய
பந்தம் எனப் பாசம் என கிள்ளைமொழி நுழைய
தத்தி வரும் தையல் இடை சுத்தி மனம் அலைய
கத்தி எனக் குத்தும் விழிப் பார்வை கண்டு நெளிய
தத்தை இவள் மொத்தம் அழகியல் கவி வரைய
நித்தம் வரும் ஒரு சிற்பம் நீஎனப் பாடாரோ....!
No comments:
Post a Comment