Thursday, June 9, 2011

முதல் சந்திப்பு...! (09.06.2006)


கண்ணோடு கண்ணோக்கி உன் முகத்தைப் பார்த்தநாள்
நெஞ்சோடு நினைவில் வைக்கப்படும்...


நீ பார்க்க நான் திரும்ப நான் பார்க்க நீ திரும்ப அன்று
நிலம் பார்த்துச் சிரித்தது நம்மை...


அறுவடையாய் ஐந்தாண்டு ஓடியது சந்தித்த பின்பு உன்னை
மறு பிறவியிலும் அங்கே காண்...


மனதோடு மலராக உன் நினைவில் மகிழ்ந்திருக்க நீ
மல்லிகையாய் வாசம் கொள்...


நோக்கிய கண்கள் நொடிப்பொழுதில் நாணி நிற்க பார்வை
தாக்கியே பனித்தன கண்கள்...

No comments:

Post a Comment