Tuesday, June 7, 2011

தாயக வலம் (பகுதி 4)


பாலர் வகுப்புக் குறும்புகள் பல பல
பக்கம் பக்கமாய் எழுதலாம் இயம்பிட....
சிறு வயது துடி துடிப்பு
எல்லாமே இருந்தன அங்கே...
புது முகங்கள் பல ரகங்கள் (பெண்கள்)
புதுப் புது அர்த்தங்கள்...
மழலை மொழி கிள்ளைப் பேச்சு
மகிழ்வான இன்னொரு உலகமது...
எழுதுவது 'சிலேட்டில்' ஆனால்
வார்த்தைகள் பதிந்தன மனத்தில்...
எண்ணிப்பார்க்க மனக்கணக்கு
நினைப்பில் வரும் சின்னப் பாடல்கள்...
எல்லாமே புதியதாய்...
ஆனாலும் குறும்புகட்கு அளவே இல்லை...
அங்கங்கே 'வால்' பெடியளுக்குக்
குறைவே இல்லை...!
பின்னல்களைப் பிடித்திழுக்கும் கிருஷ்ணர்கள்
ஒரு சிலர்...
பிழையாக பாட்டுப் பாடும் சீண்டல்கள்
ஒரு சிலர்...
கண்ணிமைக்கும் பொழுதிலே பென்சிலைக்
களவாடும் குறும்புகள்...
அப்பப்பா அடுக்கடுக்காய் ஆயிரம் கதைகள்...
எல்லாமே ஒருங்கிணைந்த கோவிலாய்
பள்ளி...
எல்லோர் மனங்களிலும் தெய்வமாய்
ஆசிரியை... !

பாதை தொடரும் ...

No comments:

Post a Comment