Tuesday, June 14, 2011
அன்னை திரேசா
அன்புக்குப் பொருள் கேட்டால் அன்னை என்பேன்
அதிலும் உதாரணம் கேட்டால்
'அன்னை திரேசா' என்பேன்...
இன மத பேதமின்றி ஒரே பார்வை...
இயலாமை இல்லாத நெடும் பயணம்...
அவதாரம் 1910 ல்
அன்று அவர் பெயர்
'அக்னஸ் கொயின் ஷா பெஜாக்கியூ'...
சிறுவயது முதல் ஈர்த்தது மக்கள் தொண்டு
கல்கத்தாவில் ஆசிரியராய் கனிவான ஆரம்பம்...
1948 அவர் வைத்திய தாதி ஆக
ஏழைகள் மகிழ்வுறவே எழுந்து நின்றார்
தெய்வமாக...
சேரிஎங்கும் சென்று சேவைகள் பல செய்தார்
சேமமுற வேண்டுமென்று நோயாளர் பணி செய்தார்
கருணை இல்லமாய் மாறியது அவர் வாழ்வு
காரிருள் அகற்றியே காட்டினார் மகிழ்வோடு...
எளிமையும் அமைதியும் எப்போதும் குடியிருக்க
எடுத்துக்காட்டாய் அவர் பயணம் ...
மனிதமும் மனிதனும் மதிப்பிழந்த பொழுதுகளில்
மறக்கமுடியா அவர் தியாகம்...
அமைதிக்காய் பரிசு பெற்று 'நோபலுக்கே'
பெருமை சேர்க்க
அகில உலகமெங்கும் அன்னையின்
பணி தொடர...
ஆண்டு 1997 ல் அன்னையின் பிரிவு...
ஆனாலும் நெஞ்சங்களில் நிழலாடும் உங்கள்
நினைவு...!
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment