Sunday, May 29, 2011

தாயக வலம் (பகுதி 2)


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவுகள்
ஓடித்திரிந்த வயல்வெளிகள்
சப்பாத்தி முள்ளுத் தைத்தாலும் கூட
சலிக்காமல் திரிந்தோம்...
முயல் பிடிக்க முழங்காலைக் குத்தி
இரத்தம் வேண்டுமென நம்பினோம்...
சுடலைப் பக்கம் போனால்
பேய் நிற்குமெனப் பயந்தோம் ...
சமவெளிகள் தேடித் திரிந்து
எட்டுமூலைப் பட்டம் விட்டோம்...
சரியான பாதையென்று குருவி தேடிப்
பற்றைகளில் தொலைந்து நின்றோம்...
நிலாச் சோறு பாட்டிக் கதைகள்
நீண்ட உறக்கம்
எல்லாமே கரைந்து போயின....
எப்போது...?

பாதை தொடரும்...

No comments:

Post a Comment