Wednesday, May 25, 2011

தாயக வலம் (பகுதி 1)


எப்போதும் ஒரு மயான அமைதி விடியல்
நிம்மதி கலைக்கும் நாய்களின் ஓலம்
நிலம் தகர்ந்ததாய் நினைப்பில் கூவும் சேவல்
பனையோலைச் சலசலப்பில் பறக்கும் குருவி
தாய் முலை நாடத் தவிக்கும் கன்று
ஏர் பூட்ட வரிசையில் எழுந்து நிற்கும் எருது
கார் காலமெனக் கலைந்து செல்லும் ஈசல்
கறையான் புற்றெடுக்க கவனமாய் நுழையும் பாம்பு
தோட்டத்து சத்தத்தில் தொலைவில் கத்தும் ஆள்க்காட்டி
குஞ்சு மிரள பருந்தை விரட்டும் தாய்க் கோழி
நித்தமும் கரையும் காகம்
நிமிட முள்ளாய்ச் சுற்றி வரும் செக்குமாடு
அதிகாலை கோவிலின் அழகான மணியோசை
கூண்டுக் கிளிகளின் அழுகுரல் பாடல்
கூச்சல் போடும் ரயிலின் சங்கீதம் - என
எம் தேசத்து வாசங்கள் பல பல...
அது அன்றைய காலம் ...
நாம் தவழ்ந்து வளர்ந்து திரிந்த காலம்
இன்று இல்லாத காலம்
இனியும் கேள்விகளாய் நிற்கும் காலம்....

பாதை தொடரும்....

No comments:

Post a Comment