Thursday, June 23, 2011
தாயக வலம் (பகுதி 8 )
குண்டூசி விசாரணையால்
பள்ளிக்கூடமே அதிர்ந்தது...
வரிசையில் நிற்கவைத்து வகையாய்க் கேள்விகள்...
அனைவருமே ஆடி நிற்க
அவன் சொன்னான் பதில்...
'பரீட்சை வினாத்தாளில் குத்திவைத்த குண்டூசி
பக்குவமாய்த் தவறிக் கதிரையில விழுந்துதென்றான்'
பாவம் கடைசியில பழி
தமிழ் வாத்தியார் மேல்...
அவர்தான் கடைசியாய் விடைத்தாள் கொடுத்தவர்...
ஆண்டு மூன்று...
அப்போதும் பல குழப்படிகள்
தாண்டி வந்தோம் பல தடைகள்...!
இல்ல விளையாட்டுப் போட்டியென்றால்
இனிக்கும் எங்களுக்கு...
அன்றைக்கு பாடம் நடத்தமாட்டார்கள் என்று...
புதுசாய் உடுப்புக் கேட்டு
வீட்டிலே பெரும் சண்டை...
வண்ண வண்ணக் குருவிகளாய்
வகை வகையாய் சுற்றுவோம்...
சின்ன வகுப்பினர்க்கும் போட்டிகள் பல உண்டு
'பணிஸ்' உண்ணும் போட்டிக்கு
வாங்கி வைத்த 'பணிஸ்களை'
யாருக்கும் தெரியாமல் தின்றது ஒரு 'வால்'...
கோலம் போடவைத்த வெள்ளை மாவைச்
சீனி என்று
அள்ளி வாயில் போட்டு அலறியது ஒரு 'வால்'...
கயிறிழுத்தல் போட்டிக்கு
கைதட்டப் போன ஒன்று...
வாழைப்பழத் தோலை காலடியில் போட்டுவிட
வழுக்கி விழுந்தது ஒரு பக்க அணி...
வினோத உடைப் போட்டிக்கு
பாரதியாய் நடிக்கப்போய்...
கட்டிய வெட்டியும் கழன்று விழ
தலைப்பாகை கழற்றி இடுப்பிலே கட்டியது...
நடந்த கூத்துக்கள் பல பல...
பாதை தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment