Monday, June 20, 2011

தாயக வலம் (பகுதி 7 )

ஆண்டு இரண்டு...
குறும்புத்தனங்களுக்குக் குறைவில்லாப் பருவம்...
அப்போது எங்களுக்குக் கணக்கென்றால்
கடுகளவும் பிடித்தமில்லை...
பச்சைப் பாவற்காயை பல்லிடுக்கில் வைத்தது போல்
கசக்கும் பாடமது...
(கற்ற கணிதம் தான் சோறு போடுது இப்போது)
கணித பாட வாத்தியாரைக் கண்டாலே ஒரு வெறுப்பு...
வீட்டுப் பாடமேண்டால் விளக்கெண்ணை எங்களுக்கு...
விளங்குதோ விளங்கேல்லையோ
'கொப்பி' முழுக்க எழுதவேணும்...
தெரிஞ்சுதோ தெரியல்லையோ
கரும்பலகையைப் பார்க்கவேணும்...
தண்டனையாய் அவர் தரும் பிரம்படிக்கு
குந்தி இருந்தாலும் நோகும் முழங்கால்...
அப்பிடித்தான் அவன் பெடியன் அடிவாங்கித் தவித்தவன்
வாத்தியார் கதிரையில குண்டூசி வைத்தவன்...
கணக்கு வாத்திக்கோ அதிஷ்டம் வேலைசெய்ய...
கதிரையில இருந்தது பாவம் 'இங்கிலீஷ் டீச்சர்'...
கோபத்தில டீச்சர் கொட்டித் தீர்த்த இங்கிலிஷில்
தலைமை ஆசிரியரே கதிகலங்கி போனாரே...!
கடைசியில பெடியனுக்கு என்ன நடந்தது...?

பாதை தொடரும்...

No comments:

Post a Comment