சிறு வயது பல கனவு
சீர்தூக்கும் கல்வித் தாகம்...
அப்பொழுதெல்லாம் எங்களுக்குள் பேதமில்லை
சாதியில்லை சண்டையில்லை...
எல்லோரும் நண்பர்கள்
எல்லோரும் சகோதரர்கள்....
ஆண் பெண் வித்தியாசம் கூட இல்லை...
அரிசியில் அப்பா கைபிடித்துத் தொடங்கிவைத்த
'அ' சொல்லித்தந்தது பல விடயங்கள்...
அன்பு, அம்மா, அரிச்சுவடி, அக்கறை, அறிவு
என ஆயிரம் அர்த்தங்கள்...
'அரசியல்' என்றபோது 'அ' மதிப்பிழந்து போனது...
ஆரம்பப் பள்ளி...
வசந்தங்களைப் பார்த்த நாட்கள் அவை...
வினோத உடைப் போட்டிகளில் எங்கள்
வித்தியாசமான முகங்கள் பார்த்தோம்...
காந்தியாய் பாரதியாய் காவடி ஆட்டக்காரனாய்
நேருவாய் சங்கிலியனாய் நெப்போலியனாய்...
கனவுகளுக்கு உருவந்தீட்டி அழகு பார்த்தோம்...
விளையாட்டுப் போட்டிகள் அவை எங்கள்
வீரம் வளர்த்தன...
'சங்கீதக் கதிரை' எங்கள் சாமர்த்தியம் சொல்ல...
'தேசிக்காய்க் கரண்டி' பொறுமையைச் சோதிக்க
'ஓட்டப் போட்டிகள்' முன்னேற்றம் காட்ட
'பலூன் உடைத்து' மும்மலங்கள் தொலைத்தோம்...
அப்படியே ஆண்டுகள் உருண்டோடின...
பாலர் பள்ளிக்கு விடைகொடுக்கும்
அந்தநாளும் வந்தது...
பாதை தொடரும்...
(Thanks to www.Alaveddy.ch for images)
ஈஸ்வரன் முன்பள்ளி விளையாட்டுப் போட்டி
அளவெட்டி


No comments:
Post a Comment