துள்ளித் திரிந்த காலம்
கரைய ஆரம்பித்தது.....
பாலர் பள்ளி போக
அழைப்பு வந்தபோது...
வழுக்கை ஆற்று வரப்புகளில்
நடந்த நிமிடங்கள்
வயல் கிணறுகளில்
'யாம்' போத்தல் கட்டி
மீன் பிடித்த ஞாகபங்கள்...
பெருமாக்கடவைத் தாமரைக் குளத்தில்
பூ பறித்த நாட்கள்...
பனம்பழம் பொறுக்கி நெருப்பில் சுட்டுத்
தின்ற காலங்கள்...
பனைமரத்துக் கள் முட்டிக்கு
கல்லெறிந்து உடைத்த கணங்கள்...
எல்லாமே கரைய ஆரம்பித்தன...
'அ' என்று தொடங்கி ...
அடிப்படைக் கல்வி ஆரம்பித்தது...
'ஈஸ்வரன் முன்பள்ளி'
எங்களை அரவணைக்க...
அரிச்சுவடிப் பாடம்
அழகாய்த் தொடங்கியது...
பாதை தொடரும்...
No comments:
Post a Comment