Saturday, July 31, 2010

நட்புக்கா(க்)க...!


அந்திவானச் சிரிப்பில் அடங்கும்
முகிலின் பொன்னிறம் ...
அள்ளித்தெளிக்கும் கண்ணீர்க் காவியின்
வெள்ளைமனத்தின் சுவடுகள்...
சொல்லத்தெரியாத சுமைகளின்
வடிகால் வனப்பாக வந்த நட்பு...!
உள்ளத்தனையது உதவிடும் எனச்
சொல்லத்தான் வேண்டுமா?
நிச்சய உலகின் நிமிட முட்களுக்குள்
சூரியப் புயலாய்ச் சுட்ட நெடி...
மனதுள் புகைந்து கருகும்
நினைவுகளின் நிஜம்...!
எரிமலைக் கோலத்தில் மழைத்துளி...
நிம்மதி கிடைத்திடும்
மனதில் மகிழ்வு...
தூய நட்பிலே
துலங்கிடும் மலர்வு...!

அளவை கலைக்கரன்

No comments:

Post a Comment