
நிமிடங்கள் யுகங்களாகும்
வாழ்வு இங்கே அரங்கேற்றம்...
இது காலத்தின் தவறா...?
கடிகாரத்தின் விதியா...?
மானிடராய்ப் பிறந்தோம்
மனிதத்தை மறந்தோம்...
பூமியிலே புதைவதற்குப்
பூர்வீகம் காரணமா..?
அறிவின் விருத்திகாய்
அழிவுகளில் பிள்ளையார் சுழியிடுகிறாய்...
கண்ணீர்,
கலன் கணக்கில்...
தண்ணீர்ப் பஞ்சம்..
தலைவிரித்தாட...
கண்ணகி இனியும் வேண்டுமா...?
இன்னொரு மதுரை
தயாரா...?
No comments:
Post a Comment