
உயரமாய்ப் பறப்பதற்கு
சிறகுகள் கடன்வாங்கி
இதயத்தில் தாளமிட்ட ...
ஓசையில் கோலமிட்டு
காத்திருந்தான்...
ஏழை வயிற்றில் எரிதணலாய்
வந்து...
அவன் வாலிபக் கனவுகளை
சிறையிட்டது காலம்...!
எதிரிகள் என்று
யாரையும் எண்ணியதில்லை...
அப்போது
நண்பர்கள் கூட ஏமாற்றிவிட்டார்கள்...
பிரபஞ்ச எல்லைக்கோட்டில்
சூரியப் பறவைகளாய்...
அனற்பிளம்பாகி அவன் மனம்
மௌனமாய் அழுகிறது...
மாற்றங்கள் அவன் காதலில்
வருமென்று...
காத்திருக்கிறான் தனியாக...!
அளவை கலைக்கரன்
சுடர் ஒளி
28 ஜனவரி 2002
No comments:
Post a Comment