பொய் என்று கூறி
வார்த்தை வானவில்லாய்
உண்மை வளைகிறதே...
தேடப்படும் போதே
தொலைந்துவிட்ட வாழ்க்கை...
நிரந்தரப் புதைகுழியில்
தள்ளப்படும் இளைஞர்கள்...
நிலவுக்குக் கல்லெறியும்
நிஜமில்லா நினைவுகள்...
சுயநல ஏகாதிபத்தியத்தில்
சுருண்டழும் மானுடங்கள் ...
ஏக்கங்கள் நெருப்பாகித்
தோற்றங்கள் கருக்க...
புன்னகை மறந்து
புதுயுகம் என்கிறீர்களே...?
பிரபஞ்சத்தின் எல்லைகளிலாவது
நிஜங்கள் தேடப்படுமா...?
இனியாவது...!!!
அளவை கலைக்கரன்
சுடர் ஒளி,
16 டிசம்பர் 2001
No comments:
Post a Comment