Monday, November 16, 2009

உயிரில் பாதி நீதான் ....!


ஒரு வசந்தம் வந்தது என் வாழ்வில்.
தென்றலாய் நீ வந்த பின்பு
நிலவுக்குப் பறந்தது என் சுவாசம்
நிலவின் மகாராணி நீ என்று அறிந்தபோது...
கனவில் எல்லாம் நீ வருவாயென
பகல் முழுதும் தூங்கியவன் நான்..
உன் வார்த்தை என்மேல் பூக்கள் தூவ..
பூங்காவில் காத்திருந்தேன் உனக்காக...
கடல் அலைகளில் உன்பெயர் தெரிய..
கரையிலும் மணலில் எழுதினேன் கவிதை...
எனக்குள் என்றாகியவளே - என்
உயிரில் பாதி நீதான் ....!

No comments:

Post a Comment