பனையோலையை மீண்டும் தூசுதட்டி எழுத ஆரம்பிக்கிறேன்... சிங்கப்பூர் வாழ்க்கை சொல்லும் பாடங்கள் எத்தனையோ... இயந்திரமயமான வாழ்க்கையின் ஓட்டத்தில் ... அங்காங்கே பல திருப்பங்கள்..
அன்று தீபாவளி நாள். செந்தோசா பூங்கா செல்லலாமென என் செல்லம் ஆசைப்பட, அழகிய பயணம்... தொடரூர்ந்து விரைந்தது கால ஓட்டம்போலவே.. அழகு தமிழில் ஒலிபெருக்கி அறிவிப்புகள்... நாங்கள் எங்கோ தொலைத்த தமிழ் நெஞ்கில் கனத்தது. எங்கள் தேசத்தின் புகைவண்டியில் மலசலகூட அறிவிப்புப் பலகையில் கூடத் தமிழ்க் கொலை.
ஒருவழியாக பூங்கா வந்தோம். அழகான அந்த இடம் பல மொழி பேசும் மனிதர்களின் சங்கமமாக இருந்தது. அப்படியே மேலே எழுந்து சுற்றி மீண்டும் கீழே வரும் ராட்டினம் கண்களை உறுத்தியது.. சற்று நேரம் உற்றுப் பார்த்தேன்.
உயர்ந்து பறந்து மேலே போனவர்கள் எல்லாம் கீழே வரத்தான் வேண்டும் என்ற வாழ்வியல் தெரிந்தது. மெல்ல மெல்ல ராட்டினம் கண்களிலிருந்து மறைய மனதில் ஓர் தெளிவு வந்தது.
அனுபவம் தொடரும்...
No comments:
Post a Comment